Site icon Tamil News

ரஷ்ய எஃகு ஆலையை தாக்கிய உக்ரேனிய ட்ரோன்கள்

உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய எஃகு உற்பத்தியாளர் நோவோலிபெட்ஸ்க் ஸ்டீலின் ஆலையை(தொழிற்சாலை) குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

எஃகு ஆலை அமைந்துள்ள மேற்கு ரஷ்யாவில் உள்ள லிபெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநரான இகோர் அர்டமோனோவ் ஒரு தனி அறிக்கையில், எஃகு ஆலையின் மீது ஒன்பது ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள லிபெட்ஸ்க் உட்பட பல பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ஒரே இரவில் ஏவப்பட்ட 36 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக குறிப்பிட்டது.

Exit mobile version