Site icon Tamil News

ரஷ்யாவின் கோர முகத்தை முதல் முறையாக எதிர்கொள்ளும் உக்ரைன்!

யுத்தம் வெடித்த இரண்டரை ஆண்டுகளில் ரஷ்ய ஏவுகணைகளின் மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் எதிர்கொள்கிறது.

விளாடிமிர் புடின் தனது Tu-22M3 மற்றும் Tu-95 மூலோபாய குண்டுவீச்சுகளை அனுப்பியதால், போரினால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் மோதல்கள்  கட்டவிழ்த்து விடப்பட்டது.

உக்ரேனிய துருப்புக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது படையெடுத்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலின் முதல் அலையில் க்ய்வ், கார்கிவ், டினிப்ரோ, சபோரிஜியா, க்மெல்னிட்ஸ்கி, க்ரெமென்சுக், வின்னிட்சியா, லிவிவ் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய இடங்களில் வெடிப்புகள் இடிமுழக்கம் போல் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் நேட்டோ விமானங்களை போலந்தின் மீது அனுப்பத் தூண்டியது.

Exit mobile version