Site icon Tamil News

ஜெர்மனியில் அதிர்ச்சி – கத்தியால் குத்திக் கொண்ட பாடசாலை மாணவர்கள்

ஜெர்மனி நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மீல வெல்ட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இருவர் இடையே கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மீல வெல்ட் பிரதேசத்தில் உள்ள ஆட் ஃவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் 12 வயது மாணவன் ஒருவனை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்து இருக்கின்றது.

இவ்வாறு படுங்காயம் அடைந்த இந்த 12 வயது சிறுவனானவர் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிறுவன் மிகவும் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version