Site icon Tamil News

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்திய உக்ரேன்

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரேன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாக அப்பகுதியின் ஆளுநர் இகோர் ஆர்ட்டமோனோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்குள் உக்ரேன் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகவும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா விமானப் படை முகாமுக்கு அருகில் இருக்கும் நான்கு கிராமங்களிலிருந்து கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிபெட்ஸ்க் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

Exit mobile version