Site icon Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் உக்ரைனியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் அனைத்து உக்ரைனியர்களுக்கும் தற்காலிக பாதுகாப்பை வழங்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் அறிவித்துள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் உக்ரைனில் இருந்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்கு உறுதியளிக்கும் வகையில் தற்காலிக பாதுகாப்பை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்பியோடுபவர்களுக்கான தற்காலிக பாதுகாப்பை மார்ச் 4, 2024 முதல் மார்ச் 4, 2025 வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லஸ்கா கோமேஸ், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிய அகதிகள் அனைவருக்கும் ஆதரவளிக்கும் என்று கூறினார்.

Exit mobile version