Site icon Tamil News

ரஷ்யாவின் முக்கிய பாலத்தை தகர்த்த உக்ரைன் : இருவர் படுகாயம்!

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் தொடர்ந்து முன்னேறி வரும் வேளையில் அவர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முக்கியமான பாலம் ஒன்று அழிக்கப்பட்டது.

ரஷ்யாவின் குர்ஸ்கில் உள்ள குளுஷ்கோவ்ஸ்கி மாவட்டத்தில் சீம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா சுமி மீது ஏவுகணைத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை உக்ரேனிய போராளிகள் குர்ஸ்கிற்குள் சுமார் 15 மைல் தொலைவில் உள்ளனர். இதனால் 120,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வழிவகுத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version