Site icon Tamil News

அனுராதபுரம் சிறையில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த கைதி உள்ளிட்ட இருவர் தப்பியோட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நேற்று (25) தப்பிச் சென்றுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் இருந்த பலகலைச் சேர்ந்த பெண்ணொருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கைதிகள் இருவரையும் மல்வத்து ஓயாவிற்கு அருகில் பயிர்ச் செய்கைக்காக அனுப்பிய போது திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version