Site icon Tamil News

ஜப்பானிய விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், விமான நிலையத்தின் நான்கு ஓடுபாதைகளில் ஒன்றை மூட வேண்டி இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், ஹனேடா விமான நிலையத்தில் விமானங்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாய் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமும், ஈ.வி.ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் தாய்லாந்து விமானத்தின் வலது இறக்கையின் ஒரு பகுதி மற்ற விமானத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது.

Exit mobile version