Site icon Tamil News

நாணய சபையில் இருந்து இருவர் வெளியேறுகின்றனர்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையில் இருந்து ராணி ஜயமஹா மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராணி ஜயமஹா மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் பல வருடங்களாக நிதிச் சபையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களாவர்.

புதிய இலங்கை மத்திய வங்கி சட்டம் தற்போது அமுலில் உள்ளதால், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

இதுவரை நாணயச் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Exit mobile version