Tamil News

இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் வெளிநாடொன்றில் உயிரிழப்பு!

தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகள் இத்தாலியின் ட்ரெபியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் ஜூலை 8 சனிக்கிழமை பிற்பகல், ரொண்டனேரா கடற்கரைக்கு அருகில் நடந்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாலை 4.30 மணியளவில் இவர்கள் இருவரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது பாபியோவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலோக்னாவில் இருந்து டைவர்ஸ் குழுவினர் “டிராகோ” தீயணைப்பு வீரர்களின் ஹெலிகாப்டருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

வெளியான தகவலின்படி மகன் தான் முதலில் நீரில் மூழ்கியிருப்பார் அதே சமயம் தந்தை அவரை காப்பாற்ற முயற்சித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக, இருவரும் நீரில் மூழ்கிவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது

Exit mobile version