Site icon Tamil News

கொழும்பு வந்த யாழ்ப்பாண இளைஞரை காணவில்லை!! தாயார் உருக்கம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடிவீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக கடந்த வருடம் 10ஆம் மாதத்தில், பலாலி காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் தெரிவிக்கின்றார்.

மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார் கடந்த எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில், தமது மகனை கண்டுபிடிக்க ஊடகங்களை நாடுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0775988204, 0775547218 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version