Site icon Tamil News

எகிப்தில் இரு பயணிகள் ரயில் மோதி பாரிய விபத்து : உயிராபத்தான நிலையில் ஐவர்!

எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 49 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கெய்ரோவின் வடகிழக்கே ஷர்கியா மாகாணத்தின் தலைநகரான ஜகாசிக் நகரில் இது நடந்தது.

ரயில்களில் ஒன்று ஜகாசிக்கிலிருந்து இஸ்மாலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version