Site icon Tamil News

முதலைகள் பண்ணையில் விழுந்த முதியவர் : 40 முதலைகள் கடித்து குதறியதால் பலி!

கம்போடியாவில் முதலைகள் பண்ணையில் விழுந்த   முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

72 வயது முதியவர் ஒருவர், முதலைகள் பண்ணையில் முட்டையிட்ட ஒரு முதலையை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போது  கூண்டிற்குள் விழுந்துள்ளார்.

இதன்போது சுமார் நாற்பது முதலைகளால் அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“முட்டையிடும் கூண்டிலிருந்து முதலையை அவர் துரத்திக் கொண்டிருந்த போது, அவர் பயன்படுத்திய குச்சியை முதலை பிடித்து இழுத்துள்ளமையால் அவர் நிலைத்தவறி கூண்டிற்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கோர் வாட்டின் புகழ்பெற்ற இடிபாடுகளின் நுழைவாயில் நகரமான சீம் ரீப்பைச் சுற்றி பல முதலைப் பண்ணைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version