Site icon Tamil News

ஸ்வீடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஸ்வீடனின் தலைநகருக்கு தெற்கே உள்ள புறநகர் பகுதியான ஃபர்ஸ்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத வெளிநாட்டவர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்று சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் இருபது வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர்  குன்னர் ஸ்ட்ரோம்மர், மொத்தம் 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதை உள்நாட்டு பயங்கரவாதம் என்றும் விவரித்தார்.

Exit mobile version