Site icon Tamil News

மொஸ்கோவில் விழுந்து விபத்துக்குள்ளான எரிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன்!

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள காட்டில் விழுந்து விபத்திற்கு உள்ளானதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துகுள்ளான குறித்த ட்ரோன் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அது பாதியாக உடைந்து காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ட்ரோன் உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமாக இருக்கலாம் என்றும், எரிபொருள் தீர்ந்தமையால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கியேவ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

Exit mobile version