Site icon Tamil News

முல்லேரியாவில் இரத்தினக் கற்களால் செய்யப்பட்ட சிலையை விற்பனை செய்ய முயற்சி!

முல்லேரிய பிரதேசத்தில் அம்பர் மற்றும் இரத்தினக் கற்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடவுள் சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அங்கொட மற்றும் கடுவெல பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

குறித்த கடவுள் சிலை தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முல்லேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version