Site icon Tamil News

காலி சிறைச்சாலையில் இருந்து மேலும் இரு கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 கைதிகள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஐந்து கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக, காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்ததுடன், அதன் பின்னர் பல கைதிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இதேவேளை, காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை சிறைச்சாலை கைதிகள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version