Site icon Tamil News

இலங்கையில் கூரிய ஆயுதத்தால் முச்சக்கரவண்டி சாரதி வெட்டிக்கொலை!

இன்று (18) காலை தலங்கம, அருப்பிட்டிய பிரதேசத்தில் உள்ளமுச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையமொன்றில் ஒருவர் கழுத்தை அறுத்து ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 45 வயதான முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version