55 வயது காதலியிடம் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், நிதி நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரியும் காதலன், அந்த பெண்ணுடன் பல ஆண்டுகளாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது .
மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக விசாரணையில்,தெரியவந்த தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,
தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் காதலன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவரிடமிருந்து தங்கப் பொருட்களை மீட்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.