சுவீடனில் இடம்பெற்ற குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்காமல், உலகளாவிய தெற்கின் மதிப்பு அமைப்பை மதிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித குர்ஆன் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.