காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கூழ் வார்த்தல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை பம்பை, உடுக்கை வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபா ஆராதனைகள் நடந்தேறியது.
பின்னர், மதியம் கூழ் வார்த்தல் விழாவும், இரவு வானவேடிக்கைகளுடன் கெங்கையம்மன் சிறப்பு பூ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து, நடைபெற்ற ஆடல், பாடல் பக்தி நாடகத்தில் திருநங்கைகள், பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.
அந்த நாடகத்தில் இரண்டு திருநங்கைகள் மற்றும் பெண்கள் குத்தாட்டம் போட்டு அசத்தி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர்.