Site icon Tamil News

பிரான்ஸ் தலைநகரில் ரயிலில் ஏற்பட்ட விபரீதம்- விரல்களை இழந்த நபர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கட்டானா எனப்படும் ஜப்பானிய வாள் ஒன்றை திருடும் முயற்சி இடம்பெற்றுள்ளது.

நேற்று காலை 6 மணி அளவில் Gare de l’Est ரயில் நிலையத்தில் குறித்த வாளுடன் நபர் ஒருவர் பயணித்துள்ளார்.

அதனை இரு திருடர்கள் திருட முற்பட்டுள்ளனர். இந்த திருட்டு முயற்சியின் போது இரு தரப்புக்கும் இடையே இழுபறி நிலவியது.

அதையடுத்து, திருடர்கள் குறித்த நபரை வாள் ஒன்றினால் வெட்டியுள்ளனர். இதில் அவரின் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தாக்குதல் மேற்கொண்ட இருவரை ரயில் நிலைய பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். பரிஸ் 10 ஆம் வட்டார பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version