Site icon Tamil News

உக்ரைனில் இதுவரை 8700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 8,700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் 500 நாட்களாகுகிறது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் இதுவரை நடைபெற்ற மோதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த தகவல்களை பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி,  மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது 700க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறைந்தது 8,766 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், 400க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version