Site icon Tamil News

புறப்பட முடியாத அளவிற்கு சுமைக் கூடியதால் 19 பயணிகளை விட்டுச் சென்ற ஈஸிஜெட் விமானம்!

புறப்பட முடியாத அளவிற்கு சுமைக் கூடியதால் பிரிட்டிஷ் எர்லைன்ஸ் ஈஸிஜெட் விமானமானது சில  பயணகிகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றுள்ளது.

ஸ்பெயினின் லான்சரோட் விமான நிலையத்திலிருந்து லிவர்பூலின் ஜான் லெனான் விமான நிலையத்திற்கு புறப்பட   இருந்த பயணிகளே இந்த அரிய நிகழ்வுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள விமான நிறுவனம், “இன்று இங்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி,  உங்களில் பலர் இருப்பதால், விமானம் புறப்படுவதற்கு கனமாக உள்ளது. ஆகவே உங்களில் யாரேனும் 20 பேர் லிவர்பூலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். தானாக முன்வரும் பயணிகளுக்கு 500 யூரோக்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பயணிகள் விரும்பவில்லை. இறுதியில் 19 விமான பயணிகள் ஸ்பெயினின் லான்சரோட் விமான நிலையத்தின் ஓடுபாதையிலேயே விட்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

Exit mobile version