Site icon Tamil News

மூன்று பணயக்கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம்!! இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கை

இஸ்ரேலிய இராணுவத்தால் மூன்று பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

பணயக்கைதிகளை கொன்ற இராணுவத்தினர் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அது விபத்து எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.

தாக்குதலின் போது, பணயக்கைதிகள் எபிரேய மொழியில் மீட்புக்காக மன்றாடினர் என்றும், அவர்களை சிக்க வைப்பது ஹமாஸின் துரோக நடவடிக்கை என வீரர்கள் நம்பி, தாக்குதலை தொடர்ந்ததாகவும் IDF கூறியது.

பணயக்கைதிகள் இருந்த கட்டிடத்தில் வெடிபொருட்கள் நிரம்பியதாக ராணுவ வீரர்கள் நினைத்தனர். இராணுவம் கட்டிடத்தை சுற்றி வளைத்தபோது, வெளியே ஓடி தப்பிக்க முயன்ற ஐந்து ஹமாஸ் உறுப்பினர்களை படையினர் கொன்றனர்.

இவர்களுக்குள் பணயக்கைதிகள் தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்றும், அதற்குள் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பணயக்கைதிகள் கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, பணயக்கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு அருகில் பணயக்கைதிகள் இருப்பதைக் குறிக்கும் ஆதாரங்களை ட்ரோன்கள் கண்டறிந்தன என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

வடக்கு காசாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் யோதம் ஹைம் (28), சமர் தலால்கா (22) மற்றும் அலோன் ஷம்ரிஸ் (26) ஆகியோர் டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தச் சம்பவம் தாங்க முடியாத சோகம் என பதிலளித்தார். பணயக்கைதிகளை அதன் சொந்த ராணுவ வீரர்கள் கொன்றது இஸ்ரேலில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

Exit mobile version