Site icon Tamil News

ரணிலுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற உரையில் தெரிவித்துள்ளார்.

சரியான திட்டத்தின் கீழ் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி சர்வதேச நிதி நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்கள் 2028 ஆம் ஆண்டு செலுத்தப்படும் என ஜனாதிபதி அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கு நிதி நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version