Site icon Tamil News

அதிரடிப் படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது

ரம்புக்கனை – திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபரை கைது செய்யச் சென்ற போதே நாரம்பெத்த பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளை இருவர் குறித்த அதிகாரிகளை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரையும் மேலும் இருவரையும் ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version