Site icon Tamil News

நாய் உறவினர்களை தேடி அலையும் சோகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியூருக்கு செல்ல குடும்பத்துடன் வந்த உறவினர்களுடன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அவர்களுடனே வந்துள்ளது.

அதனை பொறுப்பெடுத்தாமல் பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு அவர்கள் குடும்பத்துடன் வெளியூருக்கு பஸ் ஏறிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றதைக் கண்ட அந்த நாய் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருக்கும்.

பஸ்களிலும் வரும் பஸ்களிலும் தொடர்ந்து ஒவ்வொரு பேருந்துகளில் முன் படியிலும் பின் படியிலும் ஏறி அவர்களை பேருந்தில் ஒவ்வொரு சீட்டாகச் சென்று அவர்களை தேடி அவர்கள் இல்லாததால் கீழே இறங்கும் நாய்.

அவர்களுக்கு குரல் கொடுத்து அழைத்தும் ஓயாமல் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதை கண்டு பேருந்து நிலையத்தில் உள்ளவர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

Exit mobile version