Site icon Tamil News

லண்டன் அமில வீச்சு தாக்குதல்: மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் : போலீசார் தீவிர விசாரணை

லண்டனின் Clapham பகுதியில் அமில வீச்சில் ஈடுபட்ட புலம்பெயர் நபர் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இரண்டு சடலங்களை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சடலங்கள் இரண்டும் அப்துல் எஸேதி என்ற அந்த புலம்பெயர் நபருடையது அல்ல என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35 வயதான எஸேதி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகவே பொலிசார் நம்புகின்றனர்.

கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை குறிப்பிட்டு, எஸேதி மேற்கு லண்டனில் உள்ள பாலத்தில் இருந்து தேம்ஸ் நதிக்குள் குதித்திருப்பார் மேலும், அந்த பாலத்தில் இருந்து அவர் திரும்பும் காட்சிகள் எதும் பதிவாகாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

 

Exit mobile version