Tamil News

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்களின் புதிய அத்தியாயம்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும்
யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தஜோதி வித்தியாஷாகர் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் நிலையும் தேசிய மட்டத்தில் 9 நிலையும் பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் ஸ்ரீபண்டாகரன் சினேகன் முதல் நிலை பெற்றுள்ளார்.

Exit mobile version