Site icon Tamil News

ஜெர்மனியில் இணையதள விளம்பரத்தால் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் இணையதள விளம்பரத்தால் காத்திருந்த அதிர்ச்ச

ஜெர்மனியில் இணையதளத்தின் ஊடாக விளம்பரம் பதிவிட்டு சிறுவர் பராமரிப்பாளர்களை தேடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கொலோன் நகரத்தில் பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்ட நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அண்மை காலங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுப்பட்ட நபருக்கு கொலோன் மாவட்ட நீதிமன்றமானது 10 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்து இருக்கின்றது.

குறித்த 34 வயதுடைய நபர் ஒருவர் இணையதளத்தின் ஊடாக தான் சிறு குழந்தைகளை பராமரிப்பதாக கூறி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளளார்.

அதன் ஊடாக சிறுவர்கள் வைத்து இருக்கும் பெற்றோரை நாடி அவர்களின் வீடுகளுக்கு சென்று அல்லது பாலர் பாடசாலைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்று கடமையாற்றி வந்துள்ளார்.

அதன் பின் சிறுவர் சிறுமிகளை பராமரிப்பதாக கூறி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தெரியவந்து இருக்கின்றது.

Exit mobile version