Site icon Tamil News

மகளை கிண்டல் செய்த இளைஞனுக்கு தந்தை கொடுத்த தண்டனை

தனது மகளை கேலி செய்ததால் ஆத்திரமடைந்து இளைஞர் ஒருவரை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் இன்று (28) கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கத்தி மற்றும் அப்போது அவர் அணிந்திருந்த ஆடைகள், அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான தந்தை மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version