Site icon Tamil News

இலங்கையில் நடந்த சோகம் – நான்கு இளைஞர்கள் பரிதாபமாக சாவு

வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன எஞ்சிய 03 இளைஞர்களின் சடலங்கள் இன்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்படை சுழியோடிக் குழுவினர் சடலங்களை மீட்டுள்ளதுடன், காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (21) காலை 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்றிருந்த நிலையில், அந்தக் குழுவில் 04 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 21 வயதுடைய 4 இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.

பலத்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் கடற்படையின் சுழியோடிக் குழுவினரால் பெரும் முயற்சியுடன் மூன்று இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மொஹமட் அஸ்வர், மொஹமட் சுனூர், மொஹமட் ஹயாப் மற்றும் மொஹமட் நவுனாஸ் ஆகிய இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Exit mobile version