Site icon Tamil News

இலங்கை அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

2024 ஆம் ஆண்டு ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறி பணிக்கு வருகை தந்த அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் நேற்றும் (8) இன்றும் (9) அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடபட்டுள்ளனர்.

இந்நிலையில் அதனை தவிர்த்து கடமைக்கு சமூகமளித்த, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வு, எதிர்கால பதவி உயர்வு மற்றும் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

Exit mobile version