Tamil News

நல்லூர் கந்தனை வழிபட சென்ற இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி!

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ். மறை மாவட்ட முதல்வர் ஒருவரும் மற்றுமொரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர்.

அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்

அவர்களது அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்துள்ளனர்.

Exit mobile version