Site icon Tamil News

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

ஐவரி கோஸ்ட் செல்லும் விமானம் ஒன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜான்கோ, இன்ஸ்டாகிராமில் இந்த விபத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அறிவித்து, சம்பவத்தின் வீடியோ பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் தூங்கிவிட்ட நிலையில், பயணிகள் தலைவலி மற்றும் தலைச்சுற்றலால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் “சவுதி அரேபியாவிலிருந்து (பயிற்சி முகாம்) காம்பியாவிற்கு இஸ்தான்புல் மற்றும் காசாபிளாங்காவில் நீண்ட இடைவெளிகளுடன் மொத்தம் 32 மணிநேரம் பயணம் செய்த பிறகு, நாங்கள் இன்று காம்பியாவிலிருந்து ஐவரி கோஸ்ட் வரை AFCON க்காக பறக்க வேண்டும்” என்று ஜான்கோ குறிவிப்பிட்டுள்ளார்.

Exit mobile version