Site icon Tamil News

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள்: வெளியான ஆவணம்

புதுடெல்லியில், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களும், நிறுவனங்களும் கணக்குத் தொடங்கி பெரும் தொகையை முதலீடு செய்கின்றனர்.

இதை கறுப்புப் பணமாக கருத முடியாது என பல ஆண்டுகளாக சுவிஸ் வங்கிகள் கூறி வருகின்றன. அதே சமயம், கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக சுவிஸ் வங்கிகள் இருப்பதாக பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களை குறிப்பிட்ட நாடுகளுக்கு சுவிஸ் அரசு அளித்து வந்தது.

2018 ஆம் ஆண்டு வரை இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு முதல், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே தகவல் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்த பட்டியலில் 104 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வரிசையில், ஐந்தாவது பட்டியல் கடந்த மாதம் எங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு மற்றும் வரி அடையாள எண், கணக்கு மற்றும் நிதித் தகவல், நிதி அறிக்கை நிறுவனம், கணக்கு இருப்பு மற்றும் மூலதன ஆதாயங்கள் உள்ளிட்ட சுவிஸ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் உள்ளன.

இந்தத் தகவல் பரிமாற்றம், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் வரி ஏய்ப்பு அல்லது பிற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க உதவுகிறது,

ஆயினும் இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை. இதுவரை மொத்தம் 104 நாடுகளின் 36 லட்சம் வங்கிக்கணக்கு விவரங்களை ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version