Site icon Tamil News

ஊசி போட்ட சிறுமிக்கு கைகளையும் கால்களையும் அசைக்க முடியாத நிலை

ஊசி போட்டதால் சிறுமி ஒருவருக்கு கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியே இது தொடர்பான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

9 மாத வயதில் அவருக்கு போடப்பட்ட தட்டம்மை தடுப்பூசியால் கை, கால்களை அசைக்க முடியவில்லை என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் வைத்திய அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்ட போது, ​​400,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இவ்வாறான கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version