வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விஷமிகளின் செயற்பாட்டால் அவ்விடத்தில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று (04.10) காலை வழமைபோல் பூஜையை மேற்கொள்வதற்காக ஆலயத்தின் குருக்கள் அங்கு சென்றபோது, சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானித்து ஆலய நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்தை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.