பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட தினத்தன்று சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவங்ச தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி அதனை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.