Site icon Tamil News

மனைவியை கொன்று மலசலகூடத்தில் புதைத்த கணவர் : 02 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மை!

யக்கஹவுல்பொத்த, ரிதிமாலியயெத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே நேற்று (29) ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான  சோமாவதி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் கணவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் பெண்ணின் கணவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வசித்து வரும் இந்த பெண், 4, 5 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்துள்ளார். பிப்ரவரி 2021 இல் வீட்டிற்கு வந்த பெண் மீண்டும் வீட்டை விட்டு வெளியேற கணவரிடம் ஐநூறு ரூபாய் கேட்டு தகராறு செய்தார். இதனையடுத்து அவரை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தையே மகனின் வீட்டுக்குச் சென்று தாய் இறந்துவிட்டதாகக் கூறியதும், அதன் பின்னர் இறந்த பெண்ணின் சடலத்தை வீட்டின் அருகே புதிதாக தோண்டப்பட்ட கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கொலையைச் செய்த சந்தேக நபர் தனது மனைவி வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்றும் உள்ளூர்வாசிகள் பலரிடம் கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் தனது மனைவி இறந்துவிட்டதாக கிராம அலுவலரிடம் கூறி, அது பற்றிய தகவலையும் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் நேற்று (29) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மஹியங்கனை பதில் நீதவான் ஏ.எஸ். திரு.கோவிந்த சந்தேக நபர்களை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version