Site icon Tamil News

பொதுமன்னிப்பு என்ற பெயரில் அரசியல் கைதிகளை குற்றவாளியாக முத்திரை குத்தும் அரசு – சக்திவேல் கண்டனம்!

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி விடுதலை செய்வதை ஏற்க முடியாதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளி உலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என்றும் எந்த வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கூடாது என்றும் அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

பொது மன்னிப்பு என குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை என்ற பெயரில், வெளியில் அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version