இலங்கையை ஆசியாவின் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உங்களுக்காக ஒரு வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள். ஆசியாவிலேயே மிகவும் வளர்ந்த நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம்.” எனக் கூறியுள்ளார்.