Site icon Tamil News

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழில் 08 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (17.09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகை  மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version