Site icon Tamil News

தூக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி

ஹொரண திகேனபுர பிரதேசத்தில் நான்கு வயது சிறுமி தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுமி வழமை போன்று தனது தாயுடன் அறையில் உறங்கச் சென்றதாகவும், சிறுமி சிறுநீர் கழித்ததை அவதானித்த தாய், ஆடைகளை மாற்றுவதற்கு தயாராகும் போது சிறுமி உயிரற்ற நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதை அடுத்து சிறுமி ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version