Site icon Tamil News

மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

இரா.சம்பந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தன் கடந்த ஞாயிற்று கிழமை நேற்று இரவு 11 மணியளவில் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தவர். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

Exit mobile version