Site icon Tamil News

ஜா-எல துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஜா-எல, தண்டுகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

47 வயதுடைய குறித்த நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்த மஞ்சுள சஹான் பெர்னாண்டோ என்ற நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version