Site icon Tamil News

தென்னிலங்கையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமிக்கு நேர்ந்த கதி

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வார்டு ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பத்து வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் இன்று (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மைனர் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் சிறுமிக்கு பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தாயிடம் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, காலி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சென்று 39 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளது.

Exit mobile version