Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல்!! தமிழ் வேட்பாளரை களமிறக்க திட்டமிடும் லைக்கா நிறுவன உரிமையாளர்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அலிராஜா செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அலிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் அதில் கூறப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அலிராஜா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கும் நோக்கில் இக்கட்சியை கையகப்படுத்தியுள்ளதாக  அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் பரந்துபட்ட ஊடக நடவடிக்கையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version