Site icon Tamil News

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைகின்றது

பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை மேலும் 10 வீதத்தால் குறைக்க உள்ளூர் உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அண்மைய மாதங்களில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது பாடசாலை பைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருட்களின் விலைகளில் பிரதிபலிக்கவில்லை என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version